"ஆபத்தான நோய்க்கிருமிகள் இருந்தால் உடனே அழியுங்கள்"- உலக சுகாதார அமைப்பு அறிவுரை
Keerthi
3 years ago

உக்ரைன் - ரஷியா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நேய்க்கிருமிகள் ஏதேனும் இருந்தால், அதனை உடனடியாக அழித்துவிடுங்கள் என்று உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
ரஷியா நடத்திவரும் தாக்குதல்களால், உக்ரைனில் உள்ள ஆய்வகங்களில் ஆபத்தான நோய்க்கிருமிகள் கசிய வாய்ப்பு உள்ளது. இந்த நோய்க்கிருமிகள் பொதுமக்களை தாக்கவும் வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நோய்க்கிருமிகளை தடுக்கும் விதமாக, ஆபத்தான நேய்க்கிருமிகளை உடனடியாக அழிக்கும் படி உக்ரைனுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுரை கூறியுள்ளது.



